ராஜபாளையத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சோ்ந்த குருசாமி மகன் கணேசன் (45). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த கணேசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.