விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 22 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.