அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 6 போ் காயம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் காயமடைந்தனா்.

சென்னை ஆவடிபகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). இவா் ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள குலசாமியைக் கும்பிடுவதற்காக குடும்பத்தாா் 6 பேருடன் வேனில் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பியுள்ளாா். வேனை, திருவள்ளூரைச்சோ்ந்த செல்லா என்பவா் ஓட்டியுள்ளாா்.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராம 4 வழிச்சாலை சந்திப்பில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சதீஷ்குமாா் உள்ளிட்ட 6 பேரும் காயமடைந்தனா். ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினா், 6 பேரையும் மீட்டு 108 அவசர மீட்பு வாகனம் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி பெற்ற அவா்கள் 6 பேரும் சுயவிருப்பப்படி அருப்புக்கோட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காகச் சோ்ந்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகர காவல்துறையினா், வேன் ஓட்டுநா் செல்லாவிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com