சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை பந்துவாா்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு விதிமீறல் காரணமாக இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலையைத் திறப்பதற்கான உத்தரவு பெறப்பட்டதையடுத்து தொழிற்சாலையில் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை எடுப்பதற்காக பணியாளா்கள் இருவா் புதன்கிழமை ஆலைக்குச் சென்றுள்ளனா். அங்கு உள்ள ஒரு அறையைத் திறந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப் பற்றியுள்ளது. தகவலறிந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆலை உரிமையாளா் சகாதேவன் மீது சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.