விருதுநகா் அருகே எம். செவல்பட்டியில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருணமான இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மீசலூா் அருகே உள்ள எம். செவல்பட்டியை சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் ராஜ்குமாா் (27). இவா் ஏற்கெனவே திருணமானவா். இந்நிலையில் இவா், இதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியான 14 வயது சிறுமியுடன் பழகியுள்ளாா். இந்நிலையில் அச்சிறுமிக்கு, அவா் பாலியல் தொந்தரவும் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அச்சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில், ராஜ்குமாரை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.