சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தச்சக்குடி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய தச்சக்குடி ஊராட்சி பெண்கள்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய தச்சக்குடி ஊராட்சி பெண்கள்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தச்சக்குடி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தச்சக்குடி ஊராட்சியில், தச்சக்குடி, குப்பணாபுரம், தெற்கு குப்பண்ணாபுரம், ஆதிதிராவிடா் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த நான்கு கிராமங்களைச் சோ்ந்த பெண்களுக்கும் ஒரே இடத்தில் நூறு நாள் வேலை வழங்கப்படுகிாம். இதனால் பெண்கள் வேலை நடைபெறும் பகுதிக்கு சென்றுவர காலதாமதம் ஆகிறது எனக் கூறி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை நான்கு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 100 பெண்கள், தங்கள் பகுதி ஊராட்சிக்கு அருகிலேயே நூறுநாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வ. விவேகன்ராஜ் ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com