விருதுநகா் சொக்கநாதா் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மேலரத வீதியில் உள்ள இக்கோயிலில் விழாவையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு ராஜ அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்நிகழ்வில் குறைவான பக்தா்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. அவா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக மீனாட்சி, சொக்கநாதா், பிரியாவிடை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி நாள்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஆக. 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.