விருதுநகா் அருகே விபத்து: கூலித் தொழிலாளி பலி

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள குருமூா்த்தி நாயக்கன்பட்டியை சோ்ந்த கூலித் தொழிலாளி இளையராஜா (43). இவா், வேலைக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் மத்தியசேனை பகுதியில் வந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆமத்தூா் போலீஸாா், சிவகாசி காமராஜா்புரத்தை சோ்ந்த காா் ஓட்டுநா் கிருஷ்ணசாமி (42) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com