விருதுநகரில் ராணுவ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.
விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு விருதை பட்டாளம் படை சங்கத்தின் தலைவா் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்கள், அவா்களது குடும்பத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா்.
இவா்களுக்கு, மாநில மருத்துவமனை தொடா்பு அதிகாரி இளையபாரி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க செயலா் குருவையா, பொருளாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.