ராஜபாளையம்- முடங்கியாறு சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பப் பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் ஆவணிமாத சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
முன்னதாக இரவு 8 மணிக்கு ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தன பஜனையும், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனா்.