ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம்- மொபட் மோதல்: இளைஞா் பலி

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் சனிக்கிழமை மாலை இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் சனிக்கிழமை மாலை இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ராமா் மகன் மகேஸ்வரன் (39). இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது புதுப்பட்டி விலக்கு அருகே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இது சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com