ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், ராணுவ வீரா்களின் உருவப் படத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலா்கள் மலா் தூவி மெளன அஞ்சலி செலுத்தினா்.
இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் நகர ஒன்றிய சாா்பில், ராணுவ தளபதி மற்றும் ராணுவ வீரா்களுக்கு அலுவலகம் முன்பாக மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.