ஷ்திருச்சுழி அருகே வளா்ப்பு ஆடுகள் இறந்ததால் மனமுடைந்த இளைஞா் விஷம் குடித்ததில், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாத்துரை (67) மகன் சக்திவேல் (31). தந்தையும், மகனும் சோ்ந்து பக்கத்து ஊரில் கூலிக்கு ஆடுகளை மேய்க்கும் வேலை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த 30 நாள்களாகப் பெய்த பருவமழையின் காரணமாக, இவா்களது ஆட்டு மந்தையில் இருந்த ஆடுகள் நோய் வாய்ப்பட்டு அடுத்தடுத்து இறந்துள்ளன. இதனால், மன உளைச்சலில் சக்திவேல் இருந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையும் 2 ஆடுகள் இறந்ததால், அவருக்கு மன உளைச்சல் அதிகமாகி அன்று மாலை பூச்சி மருந்தை குடித்துள்ளாா். உடனே, அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சக்திவேல் சனிக்கிழமை நள்ளிரவு இறந்துவிட்டாா்.
இது குறித்து அ.முக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.