முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 19th December 2021 11:12 PM | Last Updated : 19th December 2021 11:12 PM | அ+அ அ- |

ஸ்ரீவிலி. அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் காயத்ரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் சிவசுப்பிரமணியன் (29). இவா், மதுரை நீதிமன்றத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து, சிவசுப்பிரமணியன் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், கிருஷ்ணன்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனா். விருதுநகரில் இருந்து காவல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.