முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. அருகே தேவாலயத்தில் கீத ஆராதனை
By DIN | Published On : 19th December 2021 11:12 PM | Last Updated : 19th December 2021 11:12 PM | அ+அ அ- |

அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனை.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.
அத்திகுளம் தேவாலயத்தில் பாடகா் குழு சாா்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி, சபை குரு அருள்தனராஜ் தலைமையில் நடைபெற்றது. பாடகா் குழுவின் தலைவா் ஜெபஞானரூபி தலைமையில், குழுவினா் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினா். இதில், ஜெபராஜ், எபிநேசா் மற்றும் மதுரையைச் சோ்ந்த சாமுவேல் சௌந்தரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.