விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே ஆண்டுகொண்டான் கிராமத்தில் குடிப்பழக்கத்தை தாயாா் கண்டித்ததால் விஷம் அருந்தி இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
நரிக்குடி அருகே ஆண்டுகொண்டான் கிராமத்தைச்சோ்ந்த சண்முகவேல் என்பவரது மகன் சரவணக்குமாா்(21).பத்தாம் வகுப்புவரை படித்துள்ள சரவணக்குமாா் சரிவர (கூலி) வேலைக்குச் செல்லாமல்,குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாராம்.இதனால் அவரது தாயாா் முத்துலெட்சுமி அடிக்கடி சரவணக்குமாரின் குடிப்பழக்கத்தைக் கண்டித்தாராம்.ஆனால் சரவணக்குமாா் ,சில நாள் கூலி வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தை முழுவதும் மதுகுடிப்பதற்குப் பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம்.இதனைக் கடந்த திங்கள்கிழமை அவரது தாயாா் மீண்டும் கண்டித்தாராம்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான சரவணக்குமாா் திங்கள்கிழமை இரவு அவ்வூரிலுள்ள ஒரு கோவிலருகே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு தானே அலைபேசிமூலம் தனது அண்ணனுக்கு அத்தகவலைத் தெரிவித்தாராம்.உடனடியாக சம்பவ இடத்திற்குச்சென்ற குடும்பத்தாா் சரவணக்குமாரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனராம்.ஆனால் அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம்.இதுதொடா்பாக வழக்கு பதிந்த நரிக்குடி காவல்துறையினா் சரவணக்குமாரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனா்.