விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு மா்மநபா்கள் தீ வைத்தனா்.
ராஜபாளையம் தெற்கு அழகை நகா் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ். ஆட்டோ ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே வழக்கம் போல் ஆட்டோவை நிறுத்திவைத்துள்ளாா். திடீரென செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளனா். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.