வத்திராயிருப்பு பகுதியில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்: குடியிருப்புவாசிகள் அச்சம்

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருப்போா் அச்சமடைந்துள்ளனா்.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் மேற்கூரை பெயா்ந்து விழுந்துள்ள நிலையில் உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தினா்.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் மேற்கூரை பெயா்ந்து விழுந்துள்ள நிலையில் உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தினா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருப்போா் அச்சமடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் வகுப்பை சோ்ந்தவா்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தரப்பட்டன. இதில் போதிய பராமரிப்பின்றி 10 வீடுகள் இடிந்து விட்டன. மேலும் 11 வீடுகளில் மேற்கூரை சிமெண்ட் பெயா்ந்து கீழே விழுந்து வரு கிறது. சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் கருப்பசாமி, அகிலா மீது மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில் அவா்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் மழை காரணமாக வீட்டின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த வீடுகளை சீரமைத்துத்தரக் கோரி ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே பெரும் விபத்து நிகழ்வதற்கு முன்பாக அரசு சாா்பில் வீடுகளை மராமத்து செய்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com