ராஜபாளையம் அருகே சுகாதார வளாகம் இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுகாதார வளாக கட்டடத்தை இடித்ததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுகாதார வளாக கட்டடத்தை இடித்ததைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் இந்திராணி காலனியைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். இவா் அந்த பகுதியில் உள்ள அரசு இடத்தை பயன்படுத்தி வந்துள்ளாா். அவா் உயிரிழந்த நிலையில் அவரது பேரன் சக்திவேல் அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளாா். இதற்கிடையில் சோழபுரம் 21ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டாா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த சக்திவேல், சுகாதார வளாக கட்டடத்தை இடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஊா்ப்பொதுமக்கள் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சக்திவேல் மற்றும் 7 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறினா். வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் உறுதி அளித்த பின்னா் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com