ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதற்கால யாக பூஜையில் தொடங்கி திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பட்டது. பின்னா், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகா் சிவஸ்ரீ எஸ்.கே. ராஜாபட்டா் தலைமையில் சித்திவிநாயகா் ஆலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா், செயலா், உறுப்பினா்கள், பழையபாளையம் கமிட்டி, பரிபாலன கமிட்டி உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.