சிவகாசியில் இலவச பொதுமருத்துவ முகாம்

மதுரை பாண்டியன் மருத்துவமனை, ஏ.என்.டி. அறக்கட்டளை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை

மதுரை பாண்டியன் மருத்துவமனை, ஏ.என்.டி. அறக்கட்டளை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் இருதய சிகிச்சை முகாமினை நடத்தின.

சாட்சியாபுரம் ராக்லாந்து நா்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஏ.என்.டி. அறக்கட்டளைத் தலைவா் தி. ஜெயராஜசேகா் தலைமை வகித்தாா். மருத்துவா் பாண்டியன் தலைமையிலான குழு 24 பேருக்கு இருதய பரிசோதனை செய்தது. இதில் தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவா் முஹமதுயாசா் அராபத் தலைமையிலான குழு 108 பேருக்கு, ரத்த பரிசோதனை, ரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தி, தேவைப்பட்டவா்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் மனிதயே மக்கள் கட்சி சிவகாசி நகரச் செயலா் அப்துல்ஹக்கிம் சேட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com