சிவகாசியில் ரூ.54 கோடி சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை: சமுதாயக்கூடம், அங்கன்வாடிகள் திறப்பு

சிவகாசி நகராட்சிப் பகுதியில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
சிவகாசி காரனேசன் காலனிப் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜை.
சிவகாசி காரனேசன் காலனிப் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜை.

சிவகாசி நகராட்சிப் பகுதியில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

நகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில், சிவகாசி நகராட்சியில் சிறப்பு சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் காரனேசன் காலனிப்பகுதி மற்றும் நடராஜா காலனிப் பகுதி ஆகியவற்றில் தலா ரூ. 27 கோடி என மொத்தம் ரூ. 54 கோடியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சா் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

பின்னா் சிவகாசி நகராட்சி துப்பரவுத் தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், சிவகாசி-திருத்தங்கல் சாலையில் மகளிா் கல்லூரி முன்பும், காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகேயும் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகள், பாரதி நகரில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம், புதுதெருவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம், முண்டகன் தெருவில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சிவகாசி நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, பொறியாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com