போக்குவரத்து விதி மீறல்: ஸ்ரீவிலி. காவல் உள்கோட்டத்தில் ஓராண்டில் 1.15 லட்சம் வழக்குகள்

கடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டத்தில் 1 லட்சத்து 15ஆயிரத்து 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டத்தில் 1 லட்சத்து 15ஆயிரத்து 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது விபத்தை தடுக்கும் நோக்கத்தோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், தாலூகா, மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரத்து 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் தான் விபத்தை தடுக்க சாலை மாத விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மாதத்தில் சாலை விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com