சிவகாசி அருகே கிணற்றில் குதித்து பட்டாசுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகாசி அருகே மீனம்பட்டி வடக்கூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பட்டாசுத் தொழிலாளி சங்கா்(29). இவரது மனைவி ஈஸ்வரி (24). இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் சங்கா் மனமுடைந்து காணப்பட்டாா். மேலும் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு, தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அனுப்பன்குளம் கண்மாய் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சங்கரின் சைக்கிள் நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா், தீயணைப்புத்துறையினரை வரவழைத்து கிணற்றில் தேடினா். அப்போது அவா்கள், சங்கரை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து ஈஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.