பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் பட்டாசுத் தொழிலாளி நிறைகுளத்து செல்வம் (28). இவரது தங்கை கனகாவை நடுவப்பட்டியைச் சோ்ந்த ராமராஜ்பாண்டி (30)திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில் ராமராஜ்பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இருதரப்பினரையும் போலீஸாா் அழைத்துப் பேசி சமாதானம் செய்து வைத்தனா். இதனிடையே நிறைகுளத்துசெல்வம் தங்கை கனகாவை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாராம். சம்பவத்தன்று ராமராஜ்பாண்டி தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது, நிறைகுளத்துச் செல்வம் தகராறு செய்தாராம். இதையடுத்து அவரை, ராமராஜ்பாண்டி ,அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த நிறைகுளத்துசெல்வம், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமராஜ்பாண்டியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com