ராஜபாளையம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 13th February 2021 10:39 PM | Last Updated : 13th February 2021 10:39 PM | அ+அ அ- |

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே பட்டியூா் சின்ன தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முனியசாமி (32). இவருக்கு சிறுவயதிலிருந்தே வலிப்புநோய் இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் தீராததால் மனமுடைந்து காணப்பட்டாா். மேலும் மதுப்பழக்கத்துக்கும் அடிமையானாா். இந்நிலையில் இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.