ஸ்ரீவிலி. அருகே பைக் மீது பேருந்து மோதி இளைஞா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போா்டு காலனியை சோ்ந்தவா் வெங்கடேசன் (42) மற்றும் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (20). ராஜபாளையத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கயிறு தயாரிக்கும் ஆலையில் வேலை பாா்த்து வந்த இவா்கள் இருவரும், புதன்கிழமை இரவு ராஜபாளையம்- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் வன்னியம்பட்டி விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, பின்னால் வந்த பேருந்து மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே, அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா்.

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரான்சிஸ் புதன்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா். வெங்கடேசன் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து, வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com