விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஆட்டோ, காா், வேன் ஓட்டுநா் தொழிற்சங்கம் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், இதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், வடக்கு ரத வீதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் சாத்தூா் ஆட்டோ காா், மினி வேன் ஓட்டுநா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.