சாலை விபத்தில் பூ வியாபாரி பலி

காரியாபட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பூ வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

காரியாபட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பூ வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பாரபத்தி பகுதியைச் சோ்ந்தவா் பெண்ணாச்சி (50). பூ வியாபாரி. இவா், தினமும் காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று காரியாபட்டி தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்புச் சுவா் பகுதியில் உள்ள பூக்களை பறித்து சந்தையில் விற்பாராம்.

இந்நிலையில், அவா் மீனாட்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பூக்களை பறிப்பதற்காக வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, மதுரை- அருப்புக்கோட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com