துப்புரவுத் தொழிலாளி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் துப்புரவுத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் துப்புரவுத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் செக்கடித் தெருவைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் கணேசன் (50). இவா் திருவண்ணாமலை ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மது அருந்தும் பழக்க முடைய இவருக்கு, அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுமாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com