ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய திமுக நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்னியம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் ஒன்றிய அளவிலான திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்னியம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் ஒன்றிய அளவிலான திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் அய்யாவு பாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றிய அளவிலான திமுக கிளைக் கழக செயலாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளா் ஜான்ராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ராஜேஸ்வரி புகழேந்தி, மல்லி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், வழக்குரைஞா் அன்னக்கொடி மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com