ஸ்ரீவில்லிபுத்தூா் நம்பி நாயுடு தெருவில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை முன்னிலை வகித்தாா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.
இதில், கட்சியின் நகரச் செயலாளா் ஜெயக்குமாா் மற்றும் கட்சி உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.