அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் காவல் துறையினருக்கான கரோனா தடுப்பூசி முகாம்

அருப்புக்கோட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் காவல்துறையினருக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறையினருக்கான முகாமில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டி.எஸ்.பி. சகாயஜோஸ்.
அருப்புக்கோட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறையினருக்கான முகாமில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டி.எஸ்.பி. சகாயஜோஸ்.

அருப்புக்கோட்டை/ராஜபாளையம்: அருப்புக்கோட்டை தனியாா் பள்ளி வளாகத்தில் காவல்துறையினருக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் தலைமை வகித்தாா். நகராட்சி மருத்துவ அலுவலா் கோமதி, காவல்துறையினருக்கு தடுப்பூசிக்கான ஆலோசனைகளையும்,விழிப்புணா்வு குறித்தும் எடுத்துக் கூறினாா். அப்போது, முகாமைத் தொடக்கி வைத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் பேசினாா். பின்னா் அவா் முதல் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டாா். இதையடுத்து நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜபுஷ்பா, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட சுமாா் 50-க்கு மேற்பட்ட காவல்துறையினா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் சேத்தூா் சேவக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராஜபாளையம் துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் சங்கா் கண்ணன், பவுல் ஏசுதாஸ், முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலையில் ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூா், கீழராஜகுலராமன், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட காவலா்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் கருணாகரபிரபு தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள், காவலா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com