ராஜபாளையம் அருகேஆவின் விற்பனை நிலையங்கள் திறப்பு

ராஜபாளையம் ஒன்றியப் பகுதிகளில் 5 இடங்களில் ஆவின் பொருள்கள் விற்பனை நிலையங்களை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் ஒன்றியப் பகுதிகளில் 5 இடங்களில் ஆவின் பொருள்கள் விற்பனை நிலையங்களை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சேத்தூா், தளவாய்புரம், ஆசிலாபுரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சா் திறந்து வைத்து, ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட பாதாம் பால், பால்கோவா, ஆவின் பட்டா் மற்றும் ஆவின் உணவு பொருள்கள் விற்பனையை தொடக்கி வைத்தாா். இவ்விழாவில் விருதுநகா் மாவட்ட ஆவின் தலைவா் கண்ணன், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் வனராஜ், மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணி செயலா் துரைமுருகேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com