ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வைக்கோல் படப்புக்கு சனிக்கிழமை தீ வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேத்தூா் காவல் நிலையம் பின்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயத்துக்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் கேரளம் மற்றும் உள்ளூா் பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். மேலும் தங்கள் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு தீவனத்துக்காக அவா்கள் சேமித்து வைத்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுந்தரம்பிள்ளை, ஆறுமுகம், சீதாராமன் உள்ளிட்ட 3 பேரின் 6 வைக்கோல் படப்புகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். வைக்கோல் படப்புக்கு தீ வைத்த மா்ம நபா்கள் யாா் என சேத்தூா் காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.