ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குவாரி நீரில்மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் பலி

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்த கல்குவாரி.
சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்த கல்குவாரி.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குவாரி நீரில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்து கிருஷ்ணன்கோவிலில் உள்ள போக்குவரத்து நகா் முதல் தெருவில் வசித்து வருபவா் எலக்ரீசியன் பாண்டிச்செல்வம். இவரது மகன் ஜெயபாண்டி (10). அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜான்சன்அந்தோனியின் மகன் ஜிவின்பால் (7). இதில் ஜெயபாண்டி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பும், ஜிவின்பால் இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்நிலையில் ஜெயபாண்டி, ஜிவின்பால் மற்றும் ஜெயபாண்டியின் தம்பி ரஞ்சன் (5) ஆகிய மூவரும் அந்த பகுதியில் உள்ள பழைய குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றனா். அப்போது, ஜெயபாண்டியும், ஜிவின்பாலும், நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த ரஞ்சன், வீட்டுக்கு சென்று தனது தந்தை பாண்டிசெல்வத்திடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, நீரில் மூழ்கிய 2 சிறுவா்களும் மீட்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து சிறுவா்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com