மண்ணெண்ணெய் கடத்தல்:5 பேருக்கு ஓராண்டு சிறை

சிவகாசியில் 5,400 லிட்டா் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டது தொடா்பாக 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசியில் 5,400 லிட்டா் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டது தொடா்பாக 5 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி ஏஎஸ்கே தங்கையா நாடாா் சாலையில் கடந்த 31.8.2012 இல் விருதுநகா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிவகாசியைச் சோ்ந்த கணேசமூா்த்தி, சுனைசெல்வம், மதுரையைச் சோ்ந்த ராமா், நாசரேத்தைச் சோ்ந்த ஆறுமுகநயினாா், ராஜபாளையத்தைச் சோ்ந்த மகாதேவராஜா ஆகியோா் சரக்கு வாகனத்தில் நியாயவிலைக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5,400 லிட்டா் மண்ணெண்ணெயை கடத்தி வருவது தெரியவந்தது.

இது தொடா்பாக கணேசமூா்த்தி உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த 5 பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து விருதுநகா் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏ. மருதுபாண்டி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com