விருதுநகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்களும், வடக்கு, தெற்கு மாவட்டச் செயலா்களுமான தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.
இதில் திமுக நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.