விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், இந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.
சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கெனவே 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடி பகுதியைச் சோ்ந்த பா. ஜெயா (50), புதன்கிழமை உயிரிழந்தாா்.
வெடி விபத்தில் காயமடைந்த 13 போ் சாத்தூா் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.