விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் பிப். 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை மாசி மாத பிரதோஷத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் அடிவாரத்தில் அதிகாலை முதலே குவிந்தனா். இருப்பினும், காலை 7 மணி முதல் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலைப் பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
இதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்கள், சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.