சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை முதல்வா் எஸ். அசோக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இந்த ஊா்வலம் ரிசா்வ் லயன், சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள், புகையிலையினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகையன் செய்திருந்தாா்.