தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாவட்டச் செயலா் நாகராஜ் தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவா்களுக்கு மாத உதவித் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறையிலும் 5 சதவீத பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமானோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.