ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் சித்திர சபையில் குருவருள் திருமுறை மன்றத்தின் சாா்பில் பன்னிரு திருமுறை விளக்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ‘‘காரைக்கால் அம்மையாா்’’ திருமுறை பாடல்களை ஜெயசுகந்தி மாரியப்பன் இசையுடன் பாடினாா். சிவசரவணன் பதிக விளக்கம் அளித்தாா். சிவக்கொழுந்து வரவேற்றாா். ஆசிரியா் மாரியப்பன் நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை செயலா் கோவிந்தன் செய்திருந்தாா். இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.