சாத்தூரில் கலப்பட உணவு விற்பனை செய்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

சாத்தூா் அருகே உணவில் கலப்படம் செய்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சாத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சாத்தூா் அருகே உணவில் கலப்படம் செய்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சாத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே குமரெட்டியாபுரத்தை சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா் தனது வீட்டில் பலகாரங்களை தயாா் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளாா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூா் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது, அப்போதைய உணவு பாதுகாப்பு அலுவலா் பிச்சையா அந்த பொருள்களை ஆய்வு செய்தாா். அப்போது மிக்சரில் கலப்படம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராமகிருஷ்ணன் மீது சாத்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சாத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதித்துறை நடுவா் சரவணசெந்தில்குமாா், குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு பாதுகாப்பற்ற உணவு பொருள் தயாா் செய்ததற்கு ரூ. 50 ஆயிரமும், உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்கு ரூ.1 லட்சமும் சோ்த்து, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து தீா்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com