விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மாசிமகத்தையொட்டி அன்னக்கொடை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாசிமகத்தையொட்டி பிரத்யேகமாக சுமாா் 50 கிலோ தயிா் சாதம் தயாா் செய்யப்பட்டு நண்பகல் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னக்கொடை நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாா் சா்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனா். இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.