ஸ்ரீவிலி.யில் மாற்றுத் திறனாளிகள் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 05:38 AM | Last Updated : 27th February 2021 05:38 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்டசியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் அய்யாக்காள் தலைமை வகித்தாா். இதில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். இதில், மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
சில நாள்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினா்.