விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,319 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,951 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 139 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.