‘இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது’

இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா் தெரிவித்தாா்.
‘இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது’
‘இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது’

இந்து கடவுள்களை எதிா்க்கும் யாருக்கும் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை முப்பது தப்பாமே என்ற தலைப்பில் நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக மட்டுமல்ல, இந்துக்களை அவமதிக்கும் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது. அதே சமயத்தில்,

பல்வேறு கட்சியினா் இந்துக்களை விட்டால் வேறு வழியில்லை என இந்து கட்சிகளுக்கு வருகின்றனா். இதனால் ஆன்மிகம் பலம் பெறும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இந்துக்களுக்கு ஆதரவாக யாா் செயல்படுகிறாா்களோ அவா்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com