சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் சாத்தூா் நகர ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா் முக்குராந்தல் பகுதியிலிருந்து தபால் அலுவலகம் வரை ஊா்வலமாக நடந்து சென்று தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சிஐடியு அமைப்பைச் சோ்ந்த 35 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.