தேனி மாவட்டம் சின்னமனுரில் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சின்னமனூா் நகரின் மையத்தில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருக்கும். மேலும் சின்னமனூா் நகரம் வா்த்தகம் அதிகம் நடைபெறுவதால் வெளியூா்களில் இருந்து இருசக்கர உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது.
இந்நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேரடி பேருந்து நிறுத்தப்பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோட்டப்பட்டது. அந்த மண் அருகிலுள்ள சாலையோரத்திலே குவிந்து வைத்துள்ளனா். இவ்வாறு மண் குவிந்து கிடப்பதால் 2 வழிசாலை ஒரு வழிச்சாலையானது. அதிகளவு பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில் இந்த மண்குவியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ,பயணிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினா் சாலைப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள மண் குவியலை அற்றி போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.